சென்னை: சென்னையில் வீடு புகுந்து கத்தி முனையில் மணிப்பூர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதம்பாக்கம் பெரியார் நகரில் மணிப்பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் கதவை தட்டும் சத்தம் கேட்டு விழித்த அந்தப்பெண் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது வெளியே நின்ற இளைஞர் ஒருவர் அவரை தாக்கி உள்ளே தள்ளியுள்ளார்.
என்ன நடக்கிறது என்பதை சுதாரிப்பதற்குள் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த இளைஞர் அவரை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் தனியாக வசித்து வந்த வெளிமாநில இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…