இவர் இதுவரை 40க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஐ.எஸ் இயக்கத்தில் சேர்த்துவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தற்போது சிரியா, ஏமன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சண்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதில் தற்போது 15 பேர் இறந்துவிட்டதாகவும் தெரியவருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து வந்த வடக்கு கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கடந்த 2 ஆண்டுகளில் திடீரென மாயமாகியுள்ளனர். இவர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்துவிட்டதாக தகவல்கள் கசிந்தன.
தற்போது இவர்களில் 5 பேர் குறித்த தகவல்களை ஹம்சா தாலிபானிடம் விசாரித்ததன் அடிப்படையில் கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது.
தேச்சிகுளத்தை சேர்ந்த அப்துல் கையூம், பாப்பினசேரியைச் சேர்ந்த சப்பான் மற்றும் கன்னூர் மாவட்டம் வல்லபட்டிணத்தைச் சேர்ந்த அப்துல் மனப் , முகமத் ஷபீர் , சுஹைல் ஆகியோர் ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்து சண்டையிட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும் இவர்கள் எவ்வாறு சிரியா சென்றடைந்தனர் என்பது குறித்து தகவல் இல்லை என்று கன்னூர் உதவி காவல் ஆணையர் சதானந்தம் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடுகளில் பணிபுரிந்து வந்த 100 முதல் 150 கேரள இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்திருக்கலாம் என்றும் கேரளா காவல்துறை சந்தேகம் தெரிவிக்கிறது.
ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்க்க சவுதி அரேபியா மற்றும் ஓமன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் நிதியுதவி அளித்ததாக ஹம்சா காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரிந்துவருவோர் குறித்து கண்காணிக்க வரைமுறை இல்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் மட்டும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஏறத்தாழ 18 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…
Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…
Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…
IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…