தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் மக்களுக்காக முதல்வராக விரும்புவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கமல்ஹாசன், அரசியலுக்குள் நுழைவது என்பது முள்கிரீடத்தை தலையில் சுமப்பது போன்றது என்றார்.
மக்களைப் பொருத்தவரையில், தங்களை யாரையும் கண்டுகொள்ளவில்லை என்றே நினைக்கின்றனரே தவிர இடதுசாரியா வலதுசாரியா அல்லது வேறு சிந்தனையுடையவர்களா என்றெல்லாம் மக்கள் பார்ப்பதில்லை என்றார்.
அரசியல் ஒரு புதைகுழி என்ற நிலையை மாற்றி அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே தற்போதைய தேவையாக இருக்கிறது.
அரசியல்வாதி ஆவதற்கு முன் என்னை நான் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக மக்களை நேரில் சென்று சந்திக்க உள்ளேன். மக்கள் சந்திப்பு பயணம் தொடர்பான விவரங்களை விரைவில் அறிவிப்பேன். மக்களின் ஆதரவு இல்லாமல் எதையுமே செய்யமுடியாது. உடனே பெரிய மாற்றத்தை கொண்டுவருவேன் என்று கூற இயலாது. ஆனால் மாற்றத்திற்கு தலைவணங்குகிறேன்.
மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கும் கீழே இறங்கிச் செல்ல தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதன்மூலம் விரைவில் அரசியலுக்கு வந்து, கட்சி தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்ற உள்ளதை கமல் உறுதிப்படுத்தியுள்ளார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…