வெற்றிலை மாலை -எடுத்த காரியத்தில் வெற்றி பெற ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெற்றிலை மாலையின் மகத்துவம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
நம்மில் பலரும் ஒரு காரியத்தை நினைத்து அது நடக்காமல் போயிருக்கும் அல்லது தடங்கலாய் கொண்டே இருக்கும் அப்படி இருப்பவர்கள் இந்த வெற்றிலை மாலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெற்றிலை மாலையும் ஆஞ்சநேயரும்:
ஆஞ்சிநேயருக்கு வடை மாலை எவ்வளவு சிறப்புடையதோ அந்த அளவிற்கு வெற்றிலை மாலை மிக சிறப்பாக கூறப்படுகிறது .ஆஞ்சநேயர் ராம நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்.
ராமாயணத்தில் சீதாவும் ராமரும் பிரிந்திருந்த போது அனுமன் சீதாவிடம் ராமரை பார்த்த செய்தியை கூறியதும் சீதா மகிழ்ச்சி அடைகிறார், இந்த மகிழ்ச்சி செய்தியை கூறியதால் அனுமனுக்கு அப்போது அங்கு கிடைத்த வெற்றிலையை பரிசாக கொடுத்தார். அனுமனும் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கிறார். இதனால்தான் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சிறப்பாக கூறப்படுகிறது.
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தும் எண்ணிக்கை
பொதுவாக ஆஞ்சநேயர் கோவில் சென்றால் 11 முறை வலம் வருவது சிறப்பாகும். அதுபோல் வெற்றிலையின் எண்ணிக்கை 11, 21, 27, 54, 108 இப்படி உங்கள் வசதி வாய்ப்பிற்கு தகுந்தாற்போல் மாலையை செய்து ஆஞ்சநேயருக்கு சாத்தலாம். சனி, செவ்வாய், வியாழன் போன்ற கிழமைகளில் இந்த வழிபாடு மேற்கொள்ளலாம். குறிப்பாக அம்மாவாசை, பௌர்ணமி திதிகளில் செய்வது மிக மிக சிறந்த பலனை கொடுக்கும்.
பலன்கள்:
வெற்றிலை மாலை வழிபாடு செய்வதன் மூலம் எடுத்த காரியத்தில் விரைவில் வெற்றி கிடைக்கும், காரிய தடைகள் அகலும் ,திருமண தடை நீங்கும்.
ஆகவே வெற்றிலை என்ற பெயரில் இருக்கும் வெற்றி உங்கள் வாழ்விலும் கிடைக்க வெற்றிலை மாலை வழிபாடு செய்யுங்கள்.
IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…
சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…
சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…
சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…
சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…
Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…