பீஸ்ட் படக்குழு அதிரடி சண்டைக் காட்சிககளை படமாக்க ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு முடிவடைந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்தது.
தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், அதிரடி சண்டைக் காட்சிககளை படமாக்க படக்குழு ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விறுவிறுவென பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியீட படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்திலிருந்த்து விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…
Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…