நிவர் புயல் காரணமாக புயலும் மழையுமாக இருப்பதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ள நிலையில், புதன்கிழமை புயல் காரைக்கால் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் குறித்துப் பல்வேறு மாவட்டங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் புதன்கிழமை மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எனது தலைமையில் கடந்த 23 ஆம் தேதி ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது எனவும், ஏற்கனவே 18ஆம் தேதி தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலும், 12ஆம் தேதி எனது தலைமையிலும், 21ஆம் தேதி மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலைமையிலும் விரிவான ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றதாகவும் பேரிடர் காலங்களில் கண்காணிக்கவும் அறிவுரை வழங்கவும் 36 மாவட்டங்களுக்கும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி 24ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் கன மழையும் 25ஆம் தேதி மாலை பாண்டிச்சேரி அருகில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை உடன் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இதனை எதிர் கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தெரிவித்துள்ளார். மேலும் புதுக்கோட்டை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிக்கக் கூடிய மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தனது அறிக்கையில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…