ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாக சபை முன்வைத்த திட்டத்தை பிசிசிஐ மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், நேற்று கொல்கத்தா, சென்னை அணியில் தலா 2 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், நேற்று நடைபெறவிருந்த பெங்களூர், கொல்கத்தா போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று விருத்திமான் சஹா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் கொரோனா உறுதியானதை தொடர்ந்து பி.சி.சி.ஐ நடப்பு ஐபிஎல் தொடரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாக சபை முன்வைத்த திட்டத்தை பிசிசிஐ மறுத்துவிட்டதாக இப்போது தகவல்கள் வெளிவருகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 13-வது ஐபிஎல் தொடர் சில மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக நடைபெற்றது. ஏப்ரல் 9 ஆம் தேதி நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை குறையவில்லை. இதனால், ஐபிஎல் நடப்பு தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாக சபை முன்மொழிந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் தொடரை நடத்தும் திட்டத்திற்கு நான்கு ஐபிஎல் உரிமையாளர்கள் ஆதரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ இந்த திட்டத்திற்கு அனுமத்தி வழங்கவில்லை என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் நிர்வாக சபையின் முன்மொழிவை பிசிசிஐ ஏற்றுக்கொண்டிருந்தால் இவை அனைத்தையும் தவிர்த்து இருந்திருக்க முடியும் என்று கூறப்படுகிறது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…