கொரோனா வைரஸ் காரணமாக விமானத் துறையில் முடங்கி உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (KIA) நாட்டின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக மாறியுள்ளது. இரண்டாவது இடத்தை இதுவரை மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் பெற்று வந்தது.
சமீபத்தில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் 2020-2021 முதல் காலாண்டிற்கான புள்ளிவிவரங்கள் இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. அதில், ஏப்ரல் முதல் ஜூன் வரை கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 4, 54, 704 சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் பயணம் செய்தனர்.
அதே நேரத்தில் மும்பையில் 3, 19, 412 பயணிகளும் , டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 12, 31, 338 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பட்டியலில் கொல்கத்தா விமான நிலையம் கூட மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், மும்பை நான்காவது இடத்தில் உள்ளது.
KIA அதிகாரிகளின் கூறுகையில், ஜூன் மாதத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு சராசரியாக 180 ஆகும். ஆகஸ்ட் நிலவரப்படி, மொத்தம் 91 விமானங்கள் வந்துள்ளது, 94 விமான நிலையத்திலிருந்து புறப்பட்டன. இதில் வந்தே பாரத் மிஷன் விமானங்களும் அடங்கும் என கூறினார்.
கொரோனா காரணமாக, விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மூத்த விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெங்களூரு விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மே 25 அன்று மத்திய அரசு உள்நாட்டு விமானங்களை அனுமதித்ததைத் தொடர்ந்து மாநிலமும் நாட்டிற்கு விமான சேவைகளை அனுமதித்துள்ளது.
பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது என கூறினார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…