இந்தோனேசியா:இன்று நடைபெற உள்ள பேட்மிண்டன் உலக டூர் இறுதி போட்டியில் பி.வி.சிந்து தென்கொரிய வீராங்கனை ஆன் சியோங்கை எதிர்த்து விளையாட உள்ளார்.
உலக பேட்மிண்டன் தரவரிசையில் ‘முதல் -8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே மோதும் உலக பேட்மிண்டன் டூர் போட்டி (World Tour Finals) இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில்,நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் உலக டூர் அரையிறுதியில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, உலகின் நம்பர் 3-வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமாகுச்சியை பரபரப்பான ஆட்டத்தில் 21-15 15-21 21-19 என்ற கணக்கில் சிந்து தோற்கடித்தார். அதன்படி,இப்போட்டியை கடுமையாகப் போராடி வென்றதன் மூலம் பி.வி.சிந்து,உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார்.
இந்நிலையில்,இந்தோனேசியாவின் பாலியில் இன்று நடைபெற உள்ள உலக பேட்மிண்டன் டூர் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து,உலக நம்பர் 6 மற்றும் தென்கொரிய வீராங்கனையான ஆன் சியோங்கை எதிர்த்து விளையாடவுள்ளார். இப்போட்டியில்,சிந்து சியோங்கை வீழ்த்தி பட்டம் வெல்வாரா? என இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
முன்னதாக,பி.வி. சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று அசத்தினார் .BWF வேர்ல்ட் டூர் பைனலுக்கு வருவதற்கு முன், அவர் தனது கடைசி மூன்று நிகழ்வுகளான பிரெஞ்ச் ஓபன், இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் மற்றும் இந்தோனேசியா ஓபன் ஆகியவற்றில் அரையிறுதியை எட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…