சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா ரசிகர்கள் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் “அயலான்” திரைப்படம் என்று கூறலாம். கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
ஏலியன் உலகத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற ஜனவரி மாத தொடக்கத்திலேயே முடிந்துவிட்டதாக படக்குழு தரப்பில் இருந்து கூறியிருந்தார்கள்.
பிறகு இந்த திரைப்படம் டிசம்பரில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.
இதையும் படியுங்களேன்- அண்ணாச்சி என்ட்ரி செதறு செதறு.. OTT-யில் வெளியாகும் ‘தி லெஜண்ட்’.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
இதனையடுத்து பிறகு மீண்டும் பண பிரச்சனை காரணமாக கிராஃபிக்ஸ் வேலைகள் நடக்காமல் போனதாகவும், தற்போது சிவகர்த்திகேயன் முயற்சியினால் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, அதி நவீன கிராஃபிக்ஸ் வேலைகளுடன், அப்டேட் வெர்ஷனாக மீண்டும் படப்பிடிப்பை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, தற்போது சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் “அயலான்” படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியீட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் மாவீரன் படப்பிடிப்பில் இணைவார். இதற்கிடையில் இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் OTT-யில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…