பறவை காய்ச்சலின் தீவிரம் தணியும் வரை, பச்சை முட்டை மற்றும் ஆப்பாயில் போன்றவற்றை சாப்பிடுவதை மக்கள் தவிர்த்துவிட வேண்டும்.
இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தொடர்ந்து, தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலானது கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தின் கால்நடை சுகாதார ஆய்வு மைய இயக்குனர் தினகரராஜ் கூறுகையில், பறவை காய்ச்சல் கோழி, வாத்து மற்றும் பறவைகளுக்கு மட்டுமே பரவியுள்ளது. இந்த காய்ச்சல் இதுவரை மனிதர்களுக்கு பரவியதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தமிழகத்தில் இன்னும் பறவைகள் கண்டறியப்படாத நிலையில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் கோழி, வாத்து இறைச்சிகள் மற்றும் அதன் முட்டைகளை நன்கு வேக வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும். 70 டிகிரியில் வேக வைக்கும் போது அதில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். பறவை காய்ச்சலின் தீவிரம் தணியும் வரை, பச்சை முட்டை மற்றும் ஆப்பாயில் போன்றவற்றை சாப்பிடுவதை மக்கள் தவிர்த்துவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரியில்…