குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதே பள்ளிகளை திறப்பதற்கு வழி – எய்ம்ஸ் தலைவர்..!

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு வழி வகுக்கும் என்று எய்ம்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கும், குழந்தைகளின் வெளிப்புற நடவடிக்கைகளுக்கும் வழியாகும் என்று தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது என்பது ஒரு மைல்கல் சாதனையாகும். 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு பாரத் பையோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் செப்டம்பர் மாதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலின் பின் குழந்தைகளுக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஆரம்பம் ஆகும் என்று கூறியுள்ளார். ஒருவேளை இதற்கு முன்னர் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைத்தால் இது குழந்தைகளுக்கு செலுத்த வாய்ப்பு உள்ளது என்று அவர் சனிக்கிழமையன்று கூறியுள்ளார். மேலும், மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தற்போது சைடஸ் காடிலா என்ற மருந்து நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான சைக்கோவ்-டி அவசர கால ஒப்புதலுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனெரலுக்கு விண்ணப்பம் செய்ய வாய்ப்பிருப்பதாகவும், இந்த தடுப்பூசி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கானது என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து எய்ம்ஸ் தலைவர், இந்த சைகோவிக்-டி மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் இதுவும் குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கும் என்று கூறியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதை சரி செய்ய கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஒன்றே வழி என தெரிவித்துள்ளார்.

மேலும் என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர் டாக்டர் பால் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை குறித்து தெரிவித்துள்ளதாவது, நம் நாட்டில் 2 முதல் 18 வயதுடையவர்கள் கிட்டத்தட்ட 13 முதல் 14 கோடி பேர் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனால் நமக்கு 25 முதல் 26 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால் கோவாக்ஸின் மட்டுமல்லாது சைக்கோவ்-டி தடுப்பூசியும் ஒப்புதலுக்கு பிறகு குழந்தைகளுக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

16 mins ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

39 mins ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

45 mins ago

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

2 hours ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

2 hours ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

3 hours ago