Categories: இந்தியா

5 மடங்கு கூடுதல் பணம் கொடுத்த ATM.. அலைமோதிய மக்கள் கூட்டம்! எங்கே தெரியுமா?

நாக்பூரில் உள்ள ஏடிஎம்மில் 5 மடங்கு கூடுதல் பணம் வருகிறது என செய்தி பரவியதால் அலைமோதியது மக்கள் கூட்டம்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாடிக்கையாளர் ஒருவர் தான் எடுக்க வந்த பணத்தை விட 5 மடங்கு கூடுதல் பணம் ஏடிஎம் இயந்திரத்தில் வந்ததை தொடர்ந்து, அந்த ஏடிஎம்-மிற்கு வெளியே ஏராளமானோர் பணம் எடுக்க திரண்டுள்ளனர். அதாவது, ஒரு நபர் ஏடிஎம்மில் இருந்து ரூ.500 எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.  ஆனால், அவரை ஆச்சரியப்படுத்தும் வகையில், அந்த இயந்திரம் ரூ.500 மதிப்புள்ள ஐந்து கரன்சி நோட்டுகளை வழங்கியது. அவர் மீண்டும் ரூ.500 எடுக்க முயன்றபோது ரூ.2,500 வந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஏடிஎம்மில் ஐந்து மடங்கு கூடுதல் பணம் வழங்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவியதால், அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. நாக்பூர் நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் கபர்கெடா நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. பின்னர், அங்குவந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏடிஎம் மையத்தை மூடிவிட்டு வங்கிக்கு தகவல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின், ஏடிஎம்மில் ரீஃபில் செய்யும் போது ஏற்பட்ட கோளாறு தான் காரணம் என்பது கண்டறியப்பட்டது.

இதற்கு காரணம் என்னவென்றால் ரூ.100 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வழங்குவதற்கான ஏடிஎம் ட்ரேயில் ரூ.500 மதிப்புள்ள கரன்சி நோட்டுகள் தவறாக வைக்கப்பட்டிருந்ததாக காபர்கெடா காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

சிசிடிவியை பார்த்தால் உண்மை தெரியும்… ஸ்வாதி மாலிவால் பரபரப்பு.!

சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,…

2 mins ago

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

32 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

36 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

54 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

57 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

58 mins ago