மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் அவர்,சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார்.இதனால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்பு ,இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகச்சியில்,திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைக்கிறார்.மேலும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி தலைமை வகிக்கிறார் . துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார்.இதனைத்தொடர்ந்து அமித்ஷாவும் உரையாற்றவுள்ளார்.இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் ,அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் மேற்கொள்ள உள்ளார்.எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என ஆலோசிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இறுதியாக நாளை காலை தனி விமானத்தில் அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அமித் ஷா தமிழகம் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.மேலும், தமிழகத்தில் தற்போது பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வரும் நிலையில் தற்போது அமித்ஷா வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…
Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…
Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…
IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…