8 மாதங்காளாக கூண்டிலிருந்த அரிசிராஜா யானை விடுவிப்பு!

அடிக்கடி பலரை கொலை செய்து வந்த அரிசி ராஜா என்ற முரட்டு யானை எட்டு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெள்ளலூர் அருகே 2017 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி அரிசி ராஜா எனும் காட்டு யானை 4 பேரை மிதித்து கொன்றது. இந்த சம்பவம் செய்தி ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அங்கு விரைந்த வனத்துறையினர் அந்த யானைக்கு மயக்க ஊசி போட்டு அதனை பிடித்தனர். அதன்பின் அது வேறொரு வனப்பகுதியில் விடப்பட்டது, அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் மே மாதம் அந்த யானை விளைநிலங்களை நாசப்படுத்தி அங்கிருந்த ஏழு வயது சிறுமியையும் கொன்றது. இந்நிலையில் இந்த யானையின் செயல் மிகவும் கொடூரமாக இருப்பதை அறிந்து பலரும் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் சிறுமி இறந்த அடுத்த நாளே முதியவர் ஒருவரும் அந்த யானையால் கொல்லப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து வனத்துறையினர் இரு கும்கி யானைகள் உதவியுடன் இந்த காட்டு யானை பிடிக்கும் முயற்சியில் மே மாதம் ஈடுபட்ட நவம்பர் மாதம் அர்த்தநாரி பாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் விவசாயிகள் கொல்லப்பட்ட பின்னரே நவம்பர் மாதத்தில் பிடித்துள்ளனர். இந்நிலையில் இந்த யானை அதிக அளவு அரிசியை உண்ணும் என்பதால் அரிசி ராஜா என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.

யானை மிகவும் கொடூரமான செயல்களை செய்து வருவதால் அதனை பிடித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து தலைமையில் இந்த யானையை பிடித்து பொள்ளாச்சி டாப்சிலிப் உள்ள வரகளியாறு பகுதியில் உள்ள மர கூண்டில் அடைத்து கடந்த 8 மாதங்களாக யானை கவனிக்கப்பட்டு வந்துள்ளது. யானைக்கு உட்காருதல், உணவு உட்கொள்ளுதல் கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல் போன்ற பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு தற்போது ஜூலை 21-ஆம் தேதி பூஜைகள் செய்யப்பட்டு வரவேற்கப்பட்டு உள்ளது.

அந்த யானைக்கு தற்பொழுது வனத்துறை சார்பில் முத்து என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நல்ல ஆரோக்கியமான நிலையில் யானை உள்ளது, மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி யானைகள் தின விழாவில் சின்னதம்பி யானையுடன் அரிசி ராஜா என்றழைக்கப்படும் முத்துவும் பங்கேற்பார் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Rebekal

Recent Posts

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

6 hours ago

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

9 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

10 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

10 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

10 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

10 hours ago