தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் அரசுஅலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை ஈடுப்பட்டனர்.கணக்கில் வராத பல லட்ச ரூபாய் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு துறையினர் மதுரை விழுப்புரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிரடியாக சோதனை செய்ததில் ₹7லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிரடி சோதனையானது மதுரை பழங்காநத்தம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி கொண்டு பத்திரப்பதிவு நடப்பதாக புகார் எழுந்த நிலையில் அங்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
நெடு நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பதிவாளர் பாலமுருகன் அறையில் கணக்கில் வராத ₹2லட்சத்து19 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 46 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் விழுப்புரம் மாவட்டம் வானூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று அதிகமான புகார்கள் குவிந்ததால் அங்கும் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர் ₹5ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து மின்வாரிய நிர்வாகப்பொறியாளர் அலுவலகத்தில் ₹2லட்சம் ரூபாய் மற்றும் பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகம் நெல்லிக்குப்பம் சார்பதிவாளர் அலுவலகம் என அடுத்தடுத்த அதிரடி சோதனையில் ₹1லட்ச ரூபாய் சிக்கியது.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் அதிரடி ரெய்டுகளால் கையூட்டு வாங்கும் அரசு அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…
Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…
Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…