கஜா புயலால் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…!

கஜா புயல்பாதிப்புகள் காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது.

கஜா புயலால் இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.அதேபோல் இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்று நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

Image result for anna university exams

ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் நேற்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.நேற்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் 22ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கஜா புயல்பாதிப்புகள் காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது.புயல் பாதிப்பை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என்று  அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் ஆகியவற்றில் நாளை (நவம்பர் 17) வழக்கம் போல தேர்வுகள் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment