கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்றுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.
கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றுள்ளது. ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி முதல் பரிசின் தொகை. இந்த நிகழ்ச்சியில் கேரள நிதிமந்திரி கே.என்.பாலகோபால் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த லாட்டரியில் டி.இ. 645465 என்ற எண்ணிற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
இந்த பரிசு கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித்துராவை சேர்ந்த ஜெயபாலன் என்பவருக்கு கிடைத்துள்ளது. இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். கடந்த 10-ந் தேதி அன்று ஜெயபாலன் லாட்டரி சீட்டை அவரது ஊரிலேயே ஒரு கடையில் வாங்கியுள்ளார்.
லாட்டரியில் முதல் பரிசு பெற்ற ஜெயபாலனுக்கு தற்போது கமிஷன் மற்றும் வரி போக ரூ.7.39 கோடி கிடைக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், துபாய் ஓட்டலில் வேலை பார்த்த வயநாட்டை சேர்ந்த செய்தலவி (48) என்பவருக்கு முதல் பரிசு விழுந்ததாக பரவிய தகவல் புரளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…
Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்…
Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…
Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…