3 மணி நேரம் தாமதமாக வந்ததால், நெஞ்சுவலியால் துடித்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை பாடி தெற்கு மாடவீதி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு வயது 65. இவர் தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இவர் வேலைக்கு செல்லாத நிலையில், இரவு குடும்பத்தினருடன் அமர்ந்து, உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்த இவருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, இரத்த வாந்தி எடுத்துள்ளார்.
இதனையடுத்து குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். தொடர்ந்து 10-ற்கும் மேற்பட்ட முறை அழைப்பு விடுத்தும் வராத நிலையில், அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் 3 மணி நேரம் கழித்து 108 வந்துள்ளது. ஆம்புலன்சில் உள்ளவர்கள் பிரகாஷை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஆம்புலன்ஸை முற்றிகையிட முயன்ற பொதுமக்களை, காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். கொரோனா சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், இதுபோன்ற அவசரமான சூழ்நிலைக்கு அம்புலன்ஸ் வருவதற்கு மறுப்பதால், அரசு இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…