சென்னை மணலி துறைமுகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை நேற்றைய தினம் ஹைதராபாத்திற்கு பாதுகாப்பாக அனுப்பட்டதாகவும் , இன்னும் இரண்டு தினங்களில் முழுவதுமாக அப்புறப்படுத்தப்படும் என்றும் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு லெபனான் நாட்டில் பெய்ரூட் துறைமுகத்தில் அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு கடந்த 6 ஆண்டுகளாக அம்மோனியம் நைட்ரேட்டை ஒரே இடத்தில் இருப்பு வைத்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதனையடுத்து இதே போன்று கடந்த 5 ஆண்டுகளாக சென்னை மணலி துறைமுகத்திலும் 740 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 740 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட்டை மணலியில் உள்ள சரக்குப்பெட்டகத்தில் 37 கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் 12 ஆயிரம் பேர் வசிப்பதால், அம்மோனியம் நைட்ரேட் கன்டெய்னர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து, ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் அதனை ஏலம் எடுத்துள்ளது. அதன்படி சுங்கத்துறை அதிகாரிகள் தலைமையில் நேற்றைய தினம் ஹைதராபாத் நிறுவனத்திற்கு அம்மோனியம் நைட்ரேட் நிறைந்த 37 கன்டெய்னர்களில் 10 கன்டெய்னர்களை லாரி மூலம் அனுப்பியுள்ளனர்.
மீதமுள்ள கன்டெய்னர்கள் விரைவில் அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளனர். இதுகுறித்து கூறிய மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இன்னும் இரண்டு தினங்களில் அம்மோனியம் நைட்ரேட் முழுவதுமாக அப்புறப்படுத்தப்படும் என்றும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டே அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், எனவே அப்பகுதியில் உள்ள மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…
Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவி ஆஜராகாததால் தீர்ப்பை வருகிற 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக்…
Rathnam : விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ரத்னம் படத்தின் ட்வீட்டர் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம்…
IIT JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியவில் மிகவும்…
Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல்…