நடிகர் சூர்யா மற்றும், இயக்குனர் பாலா கூட்டணியில், வெளியான நந்தா, பிதாமகன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இவர்களது கூட்டணி அடுத்ததாக எப்போது இணையும் என ரசிகர்கள் காத்திருந்தார்கள்.
இவர்களது காத்திருப்பை பூர்த்தி செய்யும் வகையில், நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில், பாலாவுடன் தான் மீண்டும் இணைவதாக அறிவித்திருந்தார். ஆனால் இசையமைப்பாளர் நடிகை யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில். தற்போது அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் இணைந்த இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 41 – என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை சூர்யாவின் 2 D நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் இசையமைப்பதாகவும், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும், ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியம் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் கன்னியாகுமாரியில் தொடங்கப்பட்டுள்ளது. இயக்குனர் பாலாவுடன் 18 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா இணைவதால் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அதில் ” எனது வழிகாட்டியான இயக்குனர் பாலா ஆக்சன் சொல்வதற்காகக் காத்திருந்தேன்… 18 வருடங்களுக்குப் பிறகு இன்று நடந்துள்ளது மகிழ்ச்சி…உங்களுடைய எல்லா விருப்பங்களும் எங்களுக்கு தேவை” என பதிவிட்டுள்ளார்.
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…