FSL பரிசோதனையில் நடிகைகள் சஞ்சனா மற்றும் ராகினி போதை மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர்கள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி இவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் போதைப்பொருட்கள் விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கடந்த ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்நிலையில், FSL பரிசோதனையில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி, போதை மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. அக்டோபர் 2020 இல் ஹைதராபாத்தில் உள்ள FSL பரிசோதனைக்கு நடிகை சஞ்சனா கல்ராணி, ராகினியின் தலை முடியை அனுப்பினார். அதன் முடிவில் இரண்டு நடிகைகளும் போதைப்பொருளை உட்கொண்டது என்பதும் உறுதியானது. இப்போது மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சனா, முடி மாதிரி கொடுக்க மறுத்துவிட்டார். எனவே, மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு சென்றனர். பின்னர், சிசிபி அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சஞ்சனா முடியைசோதனைக்கு அனுப்பியது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 14 அன்று சிறையில் அடைக்கப்பட்ட நடிகை ராகினி திவேதி 140 நாட்கள் காவலில் இருந்த பிறகு ஜனவரி 21, 2021 அன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு ஜனவரி 25 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 16 அன்று சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சனா கல்ராணி, டிசம்பர் 11, 2020 அன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 56 நாட்கள் சிறையில் இருந்த சஞ்சனா கல்ராணி கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின்…
Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில்…
Mathew Hayden : ஐபிஎல் தொடரில் மிகவும் ஆபத்தான வீரரான வெளிநாட்டு வீரர் ஒருவரை பற்றி மேத்யூ ஹைடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசி இருந்தார். ஐபிஎல் தொடர்…
M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி…
NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு…
Watermelon milk shake- தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை…