People of Indian origin who won the UK Election 2024 [File Image]
UK தேர்தல்: பிரிட்டன் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி 7 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
650 இடங்களை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நேற்று நிறைவடைந்து. இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில் தனி பெரும்பான்மையுடன் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இதற்கு முழு பேறுபெற்றுள்ளார் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்.
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள தொழிலாளர் கட்சிக்கும், விரைவில் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள கீர் ஸ்டார்மருக்கும் பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2019 தேர்தலின் போது இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 பேர் எம்பிகளாக தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அதே போல இந்த முறையும் 107 இந்திய வம்சாவளியினர் பல்வேறு கட்சிகள் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு இருந்தனர். தற்போது அதன் முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்இதோ…
ரிஷி சுனக் : ஆட்சியை இழந்தாலும் வடக்கு யார்க்ஷயர் தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக எம்பியாக வெற்றி பெற்றுள்ளார்.
ஷிவானி ராஜா : தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிட்ட இவர், லீசெஸ்டர் ஈஸ்ட் தொகுதியில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
கனிஷ்கா நாராயண் : தொழிலாளர் கட்சி சார்பாக வேல்ஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள்ளார். அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ள முதல் சிறுபான்மை பின்னனி கொண்ட வேட்பாளர் கனிஷ்கா நாராயண்.
சுயெல்லா : கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக பிரேவர்மேன் ஃபேர்ஹாம் மற்றும் வாட்டர்லூவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளர்.
ககன் மொகிந்திரா : கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக தென் மேற்கு ஹெர்ட்ஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
நவேந்து மிஸ்ரா : தொழிலாளர் கட்சி சார்பாக ஸ்டாக்போர்ட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர்தான் கடந்த 2019 தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.
சத்வீர் கவுர் : தொழிலாளர் கட்சி சார்பாக சவுத்தாம்ப்டன் டெஸ்ட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
உமா குமரன் : லண்டன் ஸ்டார்ட்ஃபோர்ட் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் ஆவார்.
இன்னும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் இந்திய வம்சாவளியினரின் வெற்றி எண்ணிக்கை கடந்த முறையை விட அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
சென்னை: சென்னை மாநகர் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக…
தனுஷ் : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான விஷயங்கள் பரவுவது என்பது புதிதான விஷயம் இல்லை. அப்படி வதந்தியான தகவல்கள் பரவும்போது அதற்கு பிரபலங்கள் சூசகமாக…
கள்ளக்குறிச்சி : தமிழக வெற்றி கழகத்தின் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருமான பரணி பாலாஜி என்பவரின் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வருகை தந்த தவெக…
டெல்லி: ஜாமீனில் வெளியே வந்தவரை கூகுள் மேப் உதவியுடன் இருப்பிடத்தை தொடர கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில்…
அபிஷேக் சர்மா : நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 46 பந்துக்கு சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இந்த போட்டி முடிந்த பிறகு…
சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி…