Categories: இந்தியா

மக்களவை இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி!

ஜலந்தர் மக்களவை இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சுஷில் குமார் ரிங்கு வெற்றி பெற்றார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சுஷில் குமார் ரிங்கு வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சுஷில் ரிங்கு, காங்கிரஸ் வேட்பாளருமான கரம்ஜித் கவுர் சவுத்ரியை 58,691 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இடைத்தேர்தலில் சுஷில் குமார் ரிங்கு 3,02,279 வாக்குகளும், சவுத்ரி 2,43,588 வாக்குகளும் பெற்றதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த பாரத் ஜோடோ யாத்ராவில் காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி இறந்ததை அடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மே 10-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. காங்கிரஸ் சார்பில் சவுத்ரியின் மனைவி கரம்ஜித் கவுரும், பாஜக வேட்பாளராக இந்தர் இக்பால் அத்வால் போட்டியிட்டனர்.

SAD-BSP பங்கா எம்எல்ஏ டாக்டர் சுக்விந்தர் குமார் சுகியை வேட்பாளராக நிறுத்தியது. இந்த நிலையில், ஜலந்தர் மக்களவை இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சுஷில் குமார் ரிங்கு வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார். காங்கிரஸ் 2வது இடமும், சிரோன்மனி அகாலிதள வேட்பாளர் 3வது இடமும் பிடித்தனர்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

27 mins ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

39 mins ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

2 hours ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

2 hours ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

2 hours ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

3 hours ago