இனிமேல் கொரோனா தடுப்பூசி போட ஆதார் கட்டாயம் இல்லை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்றும், ஆதார் இல்லை என்றால் தடுப்பூசி போட மறுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தது.
மத்திய அரசு, தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் முன் பதிவு செய்வதற்காக கோவின் என்ற பிரத்தியேக ஒரு இணையதளத்தை உருவாக்கியது.இதில், முன்பதிவு செய்யும்போது முன்பதிவு செய்யும் பயனாளியின் ஆதார், ஓட்டுரிமை உள்ளிட்டவை கேட்கப்படுகிறது. அப்படி ஆதார் அடையாள அட்டை இல்லை என்றால், தடுப்பூசி போட மறுக்கப்படுவதாக மத்திய அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றுள்ளன.
இந்நிலையில், இது குறித்து ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கான சேவைகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையும் ஏற்படுத்துவதற்காக ஆதார் எண் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதார் எண் இல்லாததால் மாற்று வழிகள் மூலம் பொது மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஆதார் சட்டத்தின்படி ஆதார் எண் இல்லை என்பதற்காக பொதுமக்களுக்கு எந்த ஒரு அத்தியாவசியத் தேவைகளும் மறுக்கப்படக்கூடாது. ஆதார் எண் இல்லை என்பதற்காக எந்த ஒரு நபருக்கும் கொரோனா தடுப்பு மருந்து, மருத்துவமனையில் அனுமதி மற்றும் சிகிச்சை உள்ளிட்ட காரியங்கள் மறுக்கப்பட கூடாது.
அவர்களிடம் ஆதாரம் இல்லாவிட்டாலும் ஆதார் சட்டம் 2016-ன் படி சம்பந்தப்பட்ட அமைப்பு அல்லது துறை அந்த நபருக்கான சேவையை கட்டாயம் வழங்க வேண்டும். அவ்வாறு சேவை மறுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…
Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…