அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டான் அருகே திருமணமான ஒன்றரை வருடமேயான இளம்பெண் மர்மமான நிலையில் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாணதிரையன்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் தஞ்சை மாவட்டம் ஆண்டாலூர் கிராமத்தை சேர்ந்த சுபிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணமாகியுள்ளது.
இந்நிலையில் ராஜ்குமார் ஓட்டுநர் என்பதால் திருமணமான சில மாதங்களில் வேலைக்கு செல்லவேண்டிய நிலையில் மனைவியிடம் சரியாக பேசவில்லை என்று சொல்லப்படுகிறது.
மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த சுபிதா தன் அம்மா வீட்டிற்க்கு சென்று நடந்ததை சொன்னதும் மகளை சமாதானப்படுத்தி பெற்றோர் மாப்பிள்ளை வீட்டில் கொண்டுவிட்டுள்ளனர்.
இந்நிலையில் சுபிதா இறந்துவிட்டதாகவும் ஜெயம்கொண்டான் மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும் சுபிதாவின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அறிந்த சுபிதாவின் உறவினர்கள் அவரின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர்.இதனையடுத்து மாப்பிள்ளையையும் அவரது தாயாரையும் கைது செய்யுமாறு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…
Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…
Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…