சுவிட்சர்லாந்திற்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் நடைபாதையாக காதலியைத் தேடிச் சென்றவர் பாக்கிஸ்தானில் பிடிபட்டார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பிரசாந்த், தான் விரும்பிய ஒரு பெண்ணைச் சந்திக்கப் சுவிட்சர்லாந்திற்கு பயணம் செய்தபோது அவர் பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து பாகிஸ்தான் அவரை வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைத்தது. மேலும் பிரசாந்த் நேற்று முன்தினம் ஹைதராபாத்திற்கு வந்தடைந்தார். அதாவது பிரசாந்த் என்ற மென்பொருள் பொறியாளர் ஏப்ரல் 2017 இல் காணாமல் போயிருந்தார். 30 மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, அவர் பாகிஸ்தானில் சிக்கியிருப்பதை பிரசாந்தின் தந்தை பாபு ராவிடம் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்தார்.
மேலும் பிரஷாந்தின் நிலைமை குறித்து சஜ்ஜனார் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இமிக்ரேஷன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பேஸ்புக்கில் சந்தித்த ஒரு பெண்ணுடன் பிரசாந்த் காதல் கொண்டதாகவும், அந்த பெண் சுவிட்சர்லாந்திற்கு இடம் பெயர்ந்ததால் பிரசாந்த் மனச்சோர்வடைந்ததாகவும் இமிக்ரேஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்விளைவாக பிரசாந்த் தனது காதலியை சந்திக்க பாஸ்போர்ட், விசா இல்லாமல் சுவிட்சர்லாந்திற்கு நடைபாதை ஒன்றை கண்டுபிடித்து சென்றுள்ளார். அதாவது இந்தியாவில் இருந்து பாகிஸ்தான், ஈரான் மற்றும் துருக்கி வழியாக சுவிட்சர்லாந்திற்கு குறுகிய பாதையில் செல்லக்கூடிய பாதையை பிரசாந்த் தேர்ந்தெடுத்து சென்றுள்ளார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டின் எல்லைக்குள் நுழைந்ததற்காக பாகிஸ்தான் அதிகாரிகளால் அவர் பிடிபட்டார் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இமிக்ரேஷன் மற்றும் வெளிவிவகார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர், பிரசாந்த் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…