தன்னை நம்பி வந்த காதலியை கொலை செய்த காதலன்!

கரூர் மாவட்டம் கேத்தம்பட்டியைச் சேர்ந்த பாண்டியின் மகள் முத்தரசி ஆவார்.இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார்.இவரது சகோதரி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வசித்து வருகிறார்.

இதனால் அவரை பார்க்க அடிக்கடி சென்று வந்துள்ளார்.அப்போது அவருக்கு அங்குள்ள பரத் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முத்தரசி மாயமாகியுள்ளார்.

இதன் காரணமாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.அப்போது முத்தரசியை பரத்துடன் அடிக்கடி பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக காவல்துறையினர் பரத்தை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது பரத் முத்தரசியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வீட்டைவிட்டு வருமாறு கூறியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் அவரின் வார்த்தையை நம்பி முத்தரசியும் தனது வீட்டைவிட்டு வெளியேறி வந்துள்ளார்.பின்னர் அவரை பரத் ஆத்துக்கால்புதூருக்கு அழைத்து வந்து தனது பெற்றோருக்கு தெரியாமல் ஒரு வீடு எடுத்து தங்கவைத்துள்ளார்.

பின்னர் பரத்துக்கு அவரின் பெற்றோர் வேறொரு இடத்தில் பெண் பார்த்துள்ளனர்.பரத்துக்கும் அந்த பெண்ணை பிடித்ததால் முத்தரசியை கழட்டிவிட நினைத்து அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.ஆனால் முத்தரசியோ அவரை விட்டுவிலகுவதாக இல்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பரத் முத்தரசியை தலையில் ஓங்கி அடித்து கொலை செய்துள்ளார்.பின்னர் பயத்தில் என்னசெய்வது என்று தெரியாவில் தனது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் முத்தரசியின் உடலை வீட்டின் பின்புறம் குழிதோண்டி புதைத்துள்ளனர்.பின்னர் சில நாட்கள் கழித்து, அதனை மீண்டும் தோண்டியெடுத்து வேறு ஒரு இடத்துக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் பார்த்த பெண்ணுடன் பரத்துக்கு திருமணம் நடந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.இதையடுத்து பரத் அவனது தாய் லட்சுமி மற்றும், உடலை எரிக்க உதவியதாக கோவிந்தன் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர்.

பின்னர் பரத்தின் தந்தை உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றன.

Recent Posts

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

5 hours ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

8 hours ago

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

9 hours ago

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

10 hours ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

10 hours ago

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake வீடியோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…

10 hours ago