பொங்கலுக்கு பிறகு தான் 2023 முதல் சட்டப்பேரவை கூட்டம்.! கரணம் இதுதான்.!

மாண்டஸ் புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் தமிழக சட்டப்பேரவை பொங்கல் விடுமுறை கழித்து தான் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவையானது  ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி முதல் வாரம் தொடங்கும். அதன் பிறகு பொங்கல் விடுமுறை விடப்படுவது வழக்கம் . ஆனால் வரும் 2023வது வருடம் இதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

பொங்கல் விடுமுறை கழித்து தான் 2023இன் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தற்போது நிவாரண பணிகளை அரசு மேற்கொண்டு வருவதால் ஜனவரி மாத தொடக்கத்தில் சட்டப்பேரவை தொடங்காது என தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment