பட வாய்ப்பிற்காக என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்! பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு பேட்டி!

நடிகை ரோகிணி நோனி பிரபலமான இந்திய நடிகையாவார்.  தமிழை போல தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருந்த நடிகை, ரோகிணி நோனி வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், வெளியில் வந்த ரோகிணி அளித்துள்ள பேட்டி ஒன்றில், “தனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால், டிவி தொடர்களில் நடிக்க முயற்சி செய்ததாகவும், அப்படி அவர் தேடும் போது அவரை படுக்ககைக்கு அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ஆனால், நான் அப்படி செய்துதான் நடிக்க வேண்டுமா என்று வாய்ப்புகளே வேண்டாம் என கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.