தீவிரவாததிற்கு எதிராக இணைந்து செயல்படுவோம்-பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

தீவிரவாததிற்கு எதிராக இணைந்து செயல்படுவோம்-பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

பிரான்சில் ஜி-7 மாநாடு நடைபெறுகிறது.இதற்காக  பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ளார்.பாரிஸ் விமான நிலையத்திற்கு சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பின் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் நரேந்திர மோடி சந்திப்பு நடைபெற்றது.

இதன் பின்னர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசுகையில்,  ஜி7 கூட்டமைப்பில்  இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.டிஜிட்டல், சைபர் பாதுகாப்பு போன்றவற்றில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற பிரான்ஸ் விரும்புகிறது.

முதல் ரஃபேல் விமானம் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரும் . ”மேக் இன் இந்தியா” திட்டத்தில் உதவுவதில் உறுதியாக உள்ளோம்.மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லாமல் ஜம்மு,காஷ்மீர் பிரச்சனைக்கு இந்தியா தீர்வு காண வேண்டும்.புல்வாமா தாக்குதலுக்கு நாங்கள் வருந்துகிறோம், தீவிரவாததிற்கு எதிராக இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார்.

Join our channel google news Youtube