பஞ்சாப்பில் மர்ம பொருள் வெடிப்பு….3 பேர் பலி 10 பேர் படுகாயம்…!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ராஜசன்னி என்ற கிராமத்தில் மர்ம பொருள் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள ராஜசன்னி என்ற கிராமத்தில் நீரன்கரிபவனில் மர்ம பொருள் திடீரென வெடித்ததில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்தோர் அதிகம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
dinasuvadu.com 

Leave a Comment