சாத்தூர் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து – 7 தொழிலாளிகள் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகேயுள்ள பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் எனும் கிராமத்தில் இயங்கி வரக்கூடிய மாரியம்மாள் எனும் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையின் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்த நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rebekal

Recent Posts

‘ஆக்ரோஷமான ஆட்டம் எந்த வகையிலும் குறையாது’ – டேனியல் வெட்டோரி

Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…

27 mins ago

தேர்தல் ஒப்புகை சீட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி.! – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!

VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…

29 mins ago

இப்படி செய்தால் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவோம்… எச்சரிக்கும் வாட்ஸ்அப்.!

WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…

49 mins ago

கேரளாவில் மும்முனை போட்டி… களத்தில் 194 வேட்பாளர்கள்.. வாக்குபதிவின் தற்போதைய நிலவரம்!

Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…

1 hour ago

ஜனநாயக கடமையை ஆற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.!

Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

1 hour ago

கண்டிப்பா மாற்றம் இருக்கு… வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்தேன் – பிரகாஷ் ராஜ்

Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…

2 hours ago