,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 621 பேருக்கு தொற்று உறுதி…! 11 பேர் உயிரிழப்பு..!

By

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 679 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7,407 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Dinasuvadu Media @2023