கோவை மாவட்டம் ஒத்தகால்மண்டபம் அருகே உள்ள பூங்காநகரை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயியான இவர் வீட்டின் அருகே ராமலிக்கத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார்.தோட்டங்களை பாதுகாக்க 3 நாய்களை ராமலிங்கம் வளர்த்து வந்து உள்ளார்.
நேற்று காலை ராமலிங்கம் தனது நண்பருடன் தோட்டத்தில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு தீவனம் வைக்க சென்றுள்ளார். அப்போது அவர்களுடன் பாதுகாக்க வளர்த்து வந்த 3 நாய்களும் சென்றது.
அப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது வழியில் திடீரென 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ராமலிங்கத்தை நோக்கி வந்தது. இதனால் ராமலிங்கம் அவரது நண்பர் இருவரும் பின் நோக்கி சென்றனர்.
இந்நிலையில் அவர்களுடன் வந்த மூன்று நாய்களும் பாம்பை நோக்கி சீரிப்பாய்ந்து பாம்பு கடித்து குதறியது. இந்த காட்சியை ராமலிங்கம் நண்பர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியும் வருகிறது.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…