சாத்தான்குளம் பெனிக்ஸ் ஜெயராஜ் வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு 14 நாட்களுக்கு சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் காவல்துறையினர் லாக்கப்பில் வைத்து தாக்கியதில் உயிரிழந்த தந்தை மகன் விவகாரம் பெரிய அளவில் உருவெடுத்து தற்பொழுது உச்சநீதிமன்றத்தால் அந்த காவலர்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர் கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது மேலும் புதிதாக ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் உதவி ஆய்வாளர்பால்துரை மற்றும் காவலர் தாமஸ் ஆகியோருக்கு உடல்நலக் குறைபாடு இருந்ததால் இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செல்லத்துரை, சாமத்துரை, வெயிலு முத்து ஆகியோர் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு 14 நாட்கள் காவல் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு மூன்று காவலர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…