தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இது வரை 35 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே நேரத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இது வரை டெங்கு காய்ச்சலுக்கு 35 பேர் பலியாகியிள்ளதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் டெங்கு குறித்து பொது மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும், டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…