இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் எதிர்கால மருந்து தேவையை புரிந்து சில மருந்துகளுக்கு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியாவில் மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் என்ற மருந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்தது. இதனால் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இந்நிலையில், 24 மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது. அதாவது டினிடாசோல், மெட்ரோனிடசோல், அசைக்ளோவிர், வைட்டமின் பிஐ, வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் பி 12 உள்ளிட்ட மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை நீக்கப்படுகிறது என்றும் இந்த புதிய உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என தகவல் கூறப்படுகிறது. மேலும் பாராசிட்டமால் மருந்து ஏற்றுமதிக்கான தடை மட்டும் நீக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…
Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு…