Categories: Uncategory

ஓய்வு பெற்றது உலகப்புகழ் பெற்ற ‘பிக் பென்’ கடிகாரம் – 2021 வரை ஓடாதாம்…!

பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற பிக் பென் கடிகாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக 2021-ம் ஆண்டு வரை ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் 1859-ம் ஆண்டு பிக்பென் என்று அழைக்கப்படும் ராட்சத கடிகாரம் திறக்கப்பட்டது. கடந்த 157 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடிகாரம் பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது நிறுத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, அந்த கடிகாரத்தில் பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அந்த கடிகாரம் அமைந்த எலிசபெத் கோபுரத்தில் மராமத்துப் பணி மேற்கொள்ளவும் பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென தனியாக நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டது.
அதன்படி அந்தப் பராமரிப்புக் குழு அடுத்த வாரம் முதல் தனது பணியைத் தொடங்கவுள்ளது. இதையடுத்து, கடிகாரத்தின் செயல்பாடு வரும் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்படுவதாகவும், வரும் 2021-ஆம் ஆண்டு வரை கடிகாரம் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராமத்துப் பணிகளுடன் எலிசபெத் கோபுரத்தில் சுற்றுலாப் பயணிகளையும், பராமரிப்புப் பணியாளர்களையும் ஏற்றிச் செல்ல உதவும் தானியங்கி லிப்ட், சமையலறை, கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன என்று பராமரிப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நான்கு ஆண்டுகள் கடிகாரம் நிறுத்தப்பட்டாலும், ஆங்கில புத்தாண்டு தினத்தை அறிவிக்கும் விதமாக கடிகாரம் மணியடிக்கச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Castro Murugan
Tags: world

Recent Posts

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

15 mins ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

33 mins ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

1 hour ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

1 hour ago

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…

3 hours ago

ஹைதராபாத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

9 hours ago