ஜம்முவில் 144 தடை உத்தரவு தளர்வு – நாளை முதல் பள்ளி கல்லூரிகள் திறப்பு !

ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 1 வாரமாக அமலில் இருந்த 144 தடை உத்தரவு ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 370 ஐ ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு விடுத்து இருந்தது. உடனடியாக, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இந்நிலையில், ஜம்மு பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு நீக்கப்படுவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காஷ்மீர் பகுதிகளில் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 4 நாட்களாக ஜம்மு பகுதிகளில் மூடப்பட்டு இருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை முதல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு பகுதியில் இன்று வெள்ளி சிறப்பு தொழுகை முடிந்து செல்லும் இஸ்லாமியர்களுக்கு வசதியாக சில சலுகைகள் தளர்வு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், மாநிலம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் இருந்து வருகின்றனர்.

Recent Posts

தோட்டத்தில் எரிந்த நிலையில் நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் உடல் மீட்பு.!

Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…

3 mins ago

தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

30 mins ago

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா அரண்மனை 4? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…

38 mins ago

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை.. 39 பேர் பலி.. 70 பேர் மாயம்.!

Heavy Rain in Brazil:  பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…

43 mins ago

15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பு ..! சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற கொடூரம் !!

Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…

50 mins ago

அவதூறு வழக்கு… கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் வாகனம் விபத்தில் சிக்கியது.!

Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…

1 hour ago