காதலனுடன் நெருக்கம்….பெண் அரசு ஊழியர் தற்கொலை…!!

மூடிகெரேவில், காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால் மனமுடைந்த பெண் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மூடிகெரேவில், காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால் மனமுடைந்த பெண் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அப்பெண்ணின் காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்தில் கணினி அலுவலராக வேலை பார்த்து வந்தவர் காவ்யா(வயது 24). அரசு ஊழியரான இவருடைய சொந்த ஊர் சிவமொக்கா மாவட்டம் ஆகும். வேலை காரணமாக இவர் மூடிகெரே பகுதியிலேயே தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் இவருக்கும், இவருடன் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். மேலும் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். அதற்காக இருவரும் தங்களுடைய பெற்றோரின் சம்மதத்தை எதிர்பார்த்து இருந்தனர்.இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீபாவளியை காவ்யா வெகு சிறப்பாக கொண்டாடினார். புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தார். மேலும் தீபாவளி அன்று தான் எடுத்த புகைப்படங்களையும் அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ஆனால் அதன்பிறகு 2 நாட்களாக அவர் தன்னுடைய வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அவருடைய வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருடைய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு காவ்யா தூக்கில் பிணமாக தொங்கினார். அதைப்பார்த்து பதற்றம் அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக இதுபற்றி மூடிகெரே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காவ்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் காவ்யா தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை யாரோ மர்ம நபர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருப்பதும், அதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.அதன்பேரில் போலீசார் காவ்யாவின் காதலனை பிடித்து, புகைப்படங்கள் எப்படி வெளியானது என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
dinasuvadu.com
Dinasuvadu desk
Tags: tamilnews

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

3 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

3 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

3 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

3 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

4 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

4 hours ago