2020 ஆம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் – தேசிய குற்ற ஆவண காப்பகம்!

கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் நிகழ்ந்த குற்ற நிலவரம் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாகவும், அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 328 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளை விட கடந்த ஆண்டு மிக அதிக அளவில் விபத்துக்களால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் தப்பித்து சென்றுள்ளதாகவும், ரயில் விபத்துகளால் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ அஜாக்கிரதை காரணமாக 133 பேரும், உள்ளாட்சி அமைப்புகளின் கவனக்குறைவு காரணமாக 51 பேரும் பலியாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதர கவனக்குறைவு காரணமாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து உள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

12 mins ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

31 mins ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

1 hour ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

1 hour ago

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…

3 hours ago

ஹைதராபாத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

9 hours ago