இந்தியாவின் டென்னிஸ் உலகின் முடிசூடா அரசியாக திகழ்பவர் தான் இந்திய டென்னிஸ் விராங்கனை சானியாமிர்சா.ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்று வருகின்ற ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
இந்த தொடரில் அரையிறுதிப் போட்டியில் சானியா மிர்சா மற்றும் உக்ரைன் நாட்டின் நடியா கிச்செனோக் உடன் ஜோடி சேர்ந்து ஸ்லோவேனியாவின் ஜிதான்செக், செக் குடியரசின் பவுஸ்கோவா ஜோடியுடன் மோதியது. முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் சானியா ஜோடி போராடி வென்றது. இரண்டாவது செட்டில் அசுரத்தனமாக விளையாடிய சானியா ஜோடி 6-2 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
குழந்தை பெற்றெடுத்து இரண்டு ஆண்டு காலமாக விளையாட்டில் இருந்து ஓய்வில் இருந்த சானியா மிர்சா அதே பலத்துடன் மீண்டும் களத்தில் களமிறங்கி விளையாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் 33 வயதான போதும் களத்தில் அனல்பறக்க விளையாடியதை அனைவரும் ரசித்து மிர்சாவுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து குவித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தரவரிசை பட்டியலில் முன்னணியில் இருக்கும் சீனாவின் சங் மற்றும் பெங் ஜோடியை சானியா மிர்சா மற்றும் கிச்செனோக் ஜோடி எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…