Categories: Uncategory

மனித இரத்தம் குடிக்கும் மாணவிகள்…இரத்ததுக்காக கொலை செய்ய திட்டம்..விசாரணையில் அதிர்ச்சி…!!

பள்ளி ஒன்றில் படிக்கும் இரு மாணவிகள் குறைந்தது 25 மாணவிகளைக் கொன்று அவர்களது இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என சதித்திட்டம் தீட்டியதற்காக கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் பயங்கர தகவல்கள் வெளியாகியுள்ளன.
புளோரிடாவிலுள்ள பார்ட்டோவ்  நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி வகுப்புக்கு வரவில்லை என அவளது தாய்க்கு பள்ளியிலிருந்து மொபைலில் செய்தி வந்தது.உடனடியாக அவர் பள்ளியைத் தொடர்பு கொண்டு தனது மகள் பள்ளிக்கு வந்தார் என தெரிவிக்க பள்ளி ஊழியர்கள் அவர்களைத் தேடத் தொடங்கினர்.
இதற்கிடையில் முந்தைய நாள் இரு மாணவிகள் ஏதோ சதித்திட்டம் தீட்டுவதை அறிந்த இன்னொரு மாணவி ஆசிரியர்களுக்கு தகவல் கொடுக்க, அது பற்றி விசாரிப்பதற்காக பள்ளிக்கு போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.மாணவிகளைத் தேடிய பள்ளி ஊழியர்கள் அவர்கள் பாத்ரூமில் ஒளிந்திருப்பதைக் கண்டனர். போலீசாரும் விசாரணையில் இணைந்து கொள்ள சிறுமிகளை பிடித்து விசாரித்ததில்  11, 12 வயதுடைய அந்த மாணவிகள் கொடுத்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
தங்களை விட வயதில் சிறிய 15 முதல் 25 மாணவிகளை கழுத்தை அறுத்துக் கொன்று அவர்கள் இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்றும், பின்னர் அவர்களது உடல் பாகங்களை பள்ளி முன் வீசி விட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்ததும் போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.அவர்களது பைகளை சோதித்ததில் கத்திகள், கத்திரிக்கோல்கள், பீட்ஸா வெட்டும் கத்திகள் மற்றும் இரத்தத்தைக் குடிப்பதற்காக ஒரு ஒயின் கிளாஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
அவர்கள் வீடுகளை சோதனையிட்டதில், அவர்கள் பாத்ரூமில் கொல்ல வேண்டும் என்று எழுதி, படம் வரைந்து திட்டம் தீட்டிய அட்டைகளும், மொபைலில் கொலை செய்வது தொடர்பாக ஒருவருக்கொருவர் அனுப்பிக் கொண்ட குறுஞ்செய்திகளும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.அந்த சிறுமிகள் உடனடியாக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
DINASUVADU

Recent Posts

ஹோட்டல் சுவையில் நூடுல்ஸ் இனி வீட்டிலேயே செய்யலாம்.!

Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…

30 mins ago

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

2 hours ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

9 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

9 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

15 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

15 hours ago