Categories: இந்தியா

பைக் ஆவணத்தை கேட்ட போலீஸ்…பைக்_கையே கொளுத்திய உரிமையாளர்…!!

போலீஸ் ஆவணங்களை கேட்டதால் பைக்கை பால்காரர் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை அடுத்த குர்கானின் டிஎஸ்டி கல்லூரி அருகே புதிய ரெயில்வே சாலையில் போலீசார் இளைஞர் ஒருவரை வழிமறித்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போது போலீசார் அவரிடம் ஆவணங்களை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த இளைஞர் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துவிட்டு செல்கிறார். இதனை பார்த்த அங்கு நின்றவர்கள் கத்திக்கொண்டு ஓடுகிற காட்சிகள் வெளியாகியுள்ளது. வீடியோ அப்பகுதியில் நடந்து சென்றவரால் எடுக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் வண்டியில் இருந்து பால் கேனை எடுத்துச் செல்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடப்பதாகவும், முழுவதும் விசாரிக்கப்பட்டதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பைக்கிற்கு இளைஞர் தீ வைத்ததும் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பைக்கின் பாகங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. யாருடையது என்பதை ஆய்வு செய்து வருகிறோம் என போலீஸ் தெரிவித்துள்ளது. பைக்கை தீ வைத்து எரித்த பால்காரர் அங்கிருந்து சென்றுவிட்டார். அவரைவிட்டது ஏன்? என்ற கேள்விக்கு பைக்கில் எரிந்த தீயை அணைப்பதில் கவனம் செலுத்தினோம் என போலீஸ் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinasuvadu.com 

Dinasuvadu desk

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

2 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

3 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

15 hours ago