தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் செக்ஸ் படங்களையும் அந்தரங்க உரையாடல்களையும் வெளியிட்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த சர்ச்சையில் நடிகர் ராணாவின் தம்பி அபிராம், டைரக்டர் சேகர் கம்முலு, எழுத்தாளரும் டைரக்டருமான கோனா வெங்கட், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, தயாரிப்பாளர்கள் வெங்கட அப்பாராவ் ஆகியோர் சிக்கி உள்ளதால் அடுத்து யார் பெயரை வெளியிடுவாரோ என்று பலரும் கதிகலங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நடிகை ஜீவிதா தனது கணவருக்கு பெண்களை சப்ளை செய்ததாக சமூக ஆர்வலர் சந்தியா புதிய புகாரை வெளியிட்டு உள்ளார். இதனை ஜீவிதா மறுத்தார். தனக்கு எதிராக அவதூறு வெளியிட்டதற்காக வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்து உள்ளார். ஸ்ரீரெட்டியின் ஆபாச வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில் அளித்து இருக்கிறார். அவர் கூறியதாவது:-
“திரையுலகில் சினிமா வாய்ப்பு கேட்கும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் அவலத்தை எதிர்த்து வருகிறேன். இந்த போராட்டத்தை நான் கைவிடப்போவது இல்லை. எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. எனது எதிர்ப்புகளை சீர்குலைக்கவும் முயற்சிகள் நடக்கிறது. நான் பயப்படமாட்டேன்.
எனது போராட்டத்தை நசுக்க நினைப்பவர்கள் முதலில் என்னை கொலை செய்து விட்டு உங்கள் நோக்கத்தை நிறைவேற்றுங்கள். நடிகர் ராஜசேகர் பற்றிய புகாரில் உண்மை இல்லை என்று ஜீவிதா கூறியிருக்கிறார். நடிகர் ராஜசேகர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது. விரைவில் வெளியிடுவேன்” இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…