திருச்சுழி தாலுகாவில் உள்ள குறவைகுளம் கிராம விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
திருச்சுழி தாலுகாவில் உள்ள பனைக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக கடந்த 2016–17 பசலி ஆண்டிற்கு ராபி பருவத்துக்கு நிலக்கடலை பயிருக்கு காப்பீட்டுத்தொகைக்கு பதிவு செய்து இருந்தோம். இதில் அதே வங்கி மூலமாக இலுப்பைக்குளம், பனைக்குடி, கண்டுகொண்டான்மாணிக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிலக்கடலை பயிருக்கான இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் எங்கள் கிராம விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நரிக்குடி யூனியனை சேர்ந்த அழகாபுரி, சிறுவனூர், வாகைக்குளம், புதுக்குளம், அருணாகிரி, கட்டலாக்குளம் ஆகிய கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
நாங்கள் அழகாபுரியில் உள்ள தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கியில் நிலக்கடலைப்பயிருக்கு காப்பீட்டுத்திட்டம் பதிவு செய்து இருந்தோம். எங்களுக்கு கடலை சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு விதை ரூ.3 ஆயிரம், உழவு கூலி ரூ.1,700 செலவாகி உள்ளது. மற்ற கூட்டுறவு வேளாண்மை வங்கிகளில் நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு 3,500 வீதம் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு ஏக்கருக்கு ரூ.350 மட்டுமே தருவோம் என்று கூறுகிறார்கள். நாங்கள் அந்த தொகையை வாங்கவில்லை. எனவே எங்களுக்கு தகுந்த பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…