” திமுக வை கலாய்த்த அமைச்சர் ” சூடு பிடிக்கின்றது அரசியல் சண்டை..!!

கருணாநிதி மறைவுக்கு, தன்னை மீண்டும் திமுகவில் இணைத்துக்கொள்ள வலியுறுத்தினார் அழகிரி. ஆனால், அது குறித்து அக்கட்சி தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வராததால், கட்சியில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் கருணாநிதி சமாதியை நோக்கி அமைதி பேரணி நடத்தினார்.

இந்நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மு.க.ஸ்டாலினையும் அழகிரியையும் மஹாபாரத கதைகளுடன்  ஒப்பிட்டு விமர்சித்தார்.

இது குறித்து பேசிய அவர், “திமுக ஒரு கௌரவர்கள் சபை. திருதிராஷ்டன் மறைவுக்குப் பிறகு பட்டாபிஷேகம் யாருக்கு என்று துரியோதனனுக்கும் துச்சாதனுக்கும் போட்டி நடக்கிறது. கௌரவர்கள் சபையே மோசமான சபை தான். அதில் துரியோதனன் வந்தாலும் துச்சாதனன் வந்தாலும் நாட்டுக்கு கேடு தான்” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.திமுகவில் முக.அழகிரியை வைத்து நடக்கு சண்டை தொடங்கி  விட்டது.

DINASUVADU 

Leave a Comment