பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அஜித் படத்தில் ஓபனிங் பாடலை எழுத வேண்டும் என்று கூறியுள்ள வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் ரவி அவானா நடித்து வருகிறார்.
அஜித்தின் விஸ்வாசம் படத்தை பொங்கலுக்கு ரீலிஸ் செய்யவர படக்குழு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா என்பவர் பேசும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விடியோ சுமார் 2 நிமிடத்திற்கும் குறைவாக ஓடுகிறது அதில், “நான் புதுக்கோட்டையின் தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்கிறேன். எனது பெயர் சரோஜா. நான் அஜித்தின் ஆரம்ப பாடலை எழுதுவதற்கு வாய்ப்பு கேட்டு புதுக்கோட்டையிலிருந்து ஆட்டோவில் சென்னைக்கு பயணிக்கிறேன்.
அஜித்தைப் பற்றி 2 பாடல்களும், கவிதைப் புத்தகம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளேன். அதை நடிகர் அஜித்திடம் கொடுக்க வேண்டும். நடிகர் அஜித்தின் படத்தில் எனது பாடல் இடம்பெற்றால் அதை நான் செய்த பாக்கியமாக நினைக்கிறேன்.இதற்கு அஜித்தின் ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டுகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்து புன்சிரிப்போடு அஜித்தை காண சென்னை நோக்கி பயணிக்கிறார் சரோஜா.தல தனது ரசிகையின் ஆசையை நிறைவேற்றி வைப்பாரா என்று சினிமா வட்டாரங்களில் சலசலப்பு எழுந்துள்ளது.
DINASUVADU
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…