சங்கரன்கோவில் அருகே 7 வயது சிறுமி கொலையில் கைதான அண்ணன் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.
சிறுமி கொலை
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு 7 வயதில் ரக்ஷனா என்ற மகளும், 15 வயதில் ஒரு மகனும் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் 15 வயது சிறுவன், அங்கு தூங்கிக் கொண்டிருந்த தனது தங்கை ரக்ஷனாவை களைகொத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தான். தடுக்க முயன்ற பாட்டியும் காயம் அடைந்தார்.
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பு
இந்த கொலை குறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்கையை கொலை செய்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று தெரியவந்தது. அவனை கைது செய்த போலீசார் பாளையங்கோட்டையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். அவனுக்கு மனநல சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தனர்.
இதற்கிடையே, சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. 7 வயது சிறுமியை அவளது அண்ணனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…